Wednesday, May 26, 2010

காதலியின் பெயரை முன்வைத்து ..




ஓர் அழகிய வண்ணத்தாளில்
கவிதையாக
கிறுக்கியிருக்கலாம்

ஒரு சில்வண்டின்
ரீங்காரம் போல
பாடிக்காட்டியிருக்கலாம்

தீர்ந்துபோன குவளைத்தண்ணிரின்
கடைசி சொட்டில் விரல் நனைத்து
தரையில் எழுதியிருக்கலாம்

மெல்லிய ராகமாய்
அவளின் காதருகில்
முணுமுணுத்திருக்கலாம்

காதலியின்
பெயரை வைத்துக்கொண்டு
இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம்

எங்கெங்கோ சுற்றித்திரியும்
இந்த
ரயில்வண்டியின் கழிவறையில்
காதலியின் பெயரெழுதிச்
சென்றவனை
என்ன செய்யலாம் ?

- ஜெனோவா

1 comment:

King Vishy said...

pattaya kelappudhu!