Sunday, January 31, 2010
நண்பன்..
டவுனுக்குப் போகலாமென்றிருந்தது
பொரித்த புரோட்டாக்களைச்
சொல்லிவிட்டு காத்துக்கொண்டிருந்தேன்
கலைந்த கேசமும் வெறித்த கண்களுமென
ஆடைகளற்றுத் தேமேவென
சாயா கேட்டுக்கொண்டிருந்தான்
பால்ய காலத்து நண்பன் கனகசுப்ரமணி
பயங் கலந்தபடி அவ்வப்போது
என்னைப் பார்த்துக்கொண்டே
முகம் முழுக்கச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்
சில ரூபாய் தாள்களைத் திணித்துவிட்டு
ஏதும் செய்ய இயலாதபடிக்கு நகர்ந்துவிட்டேன்
பெருங்குரலெடுத்து ஓலமிட்டான் நண்பன்
உலகத் துன்பத்தின் ஒட்டுமொத்தக் குரலாக
அது இருந்தது!
- பாக்கியம் சங்கர்.
Flickr Link
Monday, January 25, 2010
உந்தன் மடி...
Tuesday, January 19, 2010
தமிலை முடிச்சுட்டேன்!'
Friday, January 15, 2010
தேவதைகள்..
ஏன் இப்படி என்றேன்
ஏன் கூடாது என்றாள்
இந் நிலவொளியில் என் மடிகிடந்து
கதைப்பாயா என்று கேட்டேன்
அடக்க மாட்டாமல் சிரித்தவள்
நீ கவிஞனா எனக் கேட்டாள்
இந்தத் தொழிலுக்கு ஏன் வந்தாய் என்றேன்
பிடிச்சிருக்கு என்றாள்
மேலும் கேட்கத் தோணாமல்
அவள் மடி புதைந்தேன்
என்னை ஆற்றுப்படுத்தியவள்
சிரித்தபடியே இருந்தாள்
தேவதைகள் அவ்வப்போது
காட்சியளித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்!
- பாக்கியம் சங்கர்.
பேதம்..
Sunday, January 10, 2010
Saturday, January 9, 2010
திருமணம் செய்!!
சேர்ந்து சுற்று
ஒன்றாய் வாழ்
அலுக்க, அலுக்க
புணர்ந்து மகிழ்
அவள் வலி உணர்
பிணக்கு கொள்
ஊடல் கொண்டாடு
கூடல் செய்
முரண்பட்டு நில்
கோபம் கொள்
நிஜ முகம் காட்டு
இத்தனையும் மீறி
இருவரிடமும்
காதல் மிச்சம் இருந்தால்
திருமணம் செய்!!
- Cable சங்கர்
Link
பெண் வாசம் !!
ஒரு
பூ வாசமே
உன் மேல்
இது நாள் மட்டுமே
கண்டேன்...
அது
பெண் வாசமாய்
மாற
அதை நான்
சுவாசமாய்
கொண்டேன் !!
Flickr Link
Saturday, January 2, 2010
சாளரம்
மாட்டியிருக்கும் சட்டை
அசையும்போதெல்லாம்
அப்பாவுக்குத் தெரியாமல்
எடுத்த பத்து ரூபாயும்
தம்பி போட்டுக்கொண்டுபோய்
இங்க் கரையோடு
வந்த ஏப்ரல் ஒண்ணும்
மழையன்று தாவணிக்கு
மேலே போட்டுக்கொண்ட
தங்கை நினைவையும்
சேர்த்தே அசைத்துவிட்டுப்
போகிறது காற்று.
மேன்ஷன்களில்
சாளரங்கள்
வைத்தவனை
என்ன செய்யலாம்?
- நர்சிம்
Flickr Link
Subscribe to:
Posts (Atom)