Thursday, June 17, 2010

உந்தன் ஆடை காயப்போடும்....



உந்தன் ஆடை காயப்போடும்
உங்கள் வீட்டுக் கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் நான் ..
தவம் பண்ணினேன் ...!!

Wednesday, June 16, 2010

நானாக கூடாதா ?? ...





எந்த பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும் ...
கண்ணை மூடிக் கொண்டாலும்
மறையாதே ...

தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளை போலே என் காதல் ஆகும் ..
அன்பே அதை உன் கண்கள்
அறியாதா?

என்றோ யாரோ உன் கையை தொடுவான் ..
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான் ..
அன்பே அது நானாக கூடாதா ?? ...

Tuesday, June 8, 2010

அடிமை சாசனம்....




எந்தன் படுக்கை அறைக்கு
உந்தன் பேரை வைக்கவோ ..

அடிமை சாசனம்
எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்...
ஆயுள் வரையில்
உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்...!!!

Monday, June 7, 2010

நித்யானந்தாவும் .. என் மனைவியும் ...




நித்யானந்தாவை
நித்தமும் பழிக்கும்
என் மனைவிக்கு
இன்று வரை தெரியாது
முத்துக்குமார் என்றொருவன்
மரித்துபோனது...
என்றாவது ஒரு நாள்
என் நாட்குறிப்பிலுள்ள
அவன் புகைபடத்தை காட்டி கேட்பாள்
அப்போது சொல்லிக்கொள்ளலாம்
நம்மையெல்லாம் ஏமாற்றினானே
ஒரு நித்யானந்தா
அவனை போல்
நம் எல்லோராலும் ஏமாற்றபட்டவன்தான்
இந்த முத்துக்குமாரென்று...

- முத்து ரூபா