Wednesday, September 23, 2009

கடவுள் ??




"என்ன வரம்
வேண்டும் கேள்!"
என்றார் கடவுள்

அது கூட
தெரியாத
நீர் என்ன
கடவுள் ??

Friday, September 18, 2009

குறை ஓவியம்!




யாரோ ஒருவரது
அதட்டலால்தான்
குழந்தைகளின் கிறுக்கல்கள்
கிறுக்கல்களாகவே
நின்றுவிடுகின்றன!

- வைகறை

Wednesday, September 16, 2009

இதழ் வளர்த்தல் !!




பனிதனில் குளித்த
பால் மலர் காண
இருபது வசந்தங்கள்
விழி வளர்த்தேன் ...

பசித்தவன் அமுதம்
பருகிட தானே
பதினேழு வசந்தங்கள்
இதழ் வளர்த்தேன் !!

Saturday, September 5, 2009

ஒரு கல்லறை ..



உலகமே
சுடுகாடாய்
இருக்க

உலக
அதிசயமாய்

ஒரு
கல்லறை ..


- கபிலன் வைரமுத்து