படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Wednesday, September 23, 2009
கடவுள் ??
"என்ன வரம்
வேண்டும் கேள்!"
என்றார் கடவுள்
அது கூட
தெரியாத
நீர் என்ன
கடவுள் ??
Friday, September 18, 2009
குறை ஓவியம்!
யாரோ ஒருவரது
அதட்டலால்தான்
குழந்தைகளின் கிறுக்கல்கள்
கிறுக்கல்களாகவே
நின்றுவிடுகின்றன!
-
வைகறை
Wednesday, September 16, 2009
இதழ் வளர்த்தல் !!
பனிதனில் குளித்த
பால் மலர் காண
இருபது வசந்தங்கள்
விழி வளர்த்தேன் ...
பசித்தவன் அமுதம்
பருகிட தானே
பதினேழு வசந்தங்கள்
இதழ் வளர்த்தேன் !!
Saturday, September 5, 2009
ஒரு கல்லறை ..
உலகமே
சுடுகாடாய்
இருக்க
உலக
அதிசயமாய்
ஒரு
கல்லறை ..
-
கபிலன் வைரமுத்து
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)