Wednesday, December 30, 2009

வளையாடும் கை !!




உனது வளையாடும்
அழகான கை
தீண்டவே..

தலையில்
இலையொன்று
விழ வேண்டுமே !!

Monday, December 28, 2009

நெற்றி பொட்டு !!




சுற்றி என்னை
துரத்தும் துயரமடி..
என்னை
நெற்றி பொட்டுக்கடியில்
வைத்துக்கொள்ளடி!!


நெற்றி பொட்டு
உதிர்ந்தால்
வெயிலடிக்கும்
உன்னை..
நெஞ்சுக்குள்ளே
மறைப்பாள்
இளையக்கொடி!!

Flickr Link

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...




நினைப்பதெல்லாம்
நடந்துவிட்டால்
தெய்வம்
ஏதுமில்லை ....

Saturday, December 12, 2009

ஒரு துண்டு பனிக்கட்டி




கூரியர் தருகிற முத்துக்குமார்
அலுத்துக்கொள்ளவில்லை மழையை.
'நாலு நாட்களாய்
நல்ல மழை சார்'
சொல்லும்போதே
ஈரமாய்ச் சிரித்தார்.
கையெழுத்திட்டு வாங்கிய
இந்தச் சிரிப்பைவிடக் கூடுதலாக
என்ன இருந்துவிடப்போகிறது
கடித உறைக்குள்!


- கல்யாண்ஜி

Photo From

Tuesday, December 8, 2009

தழும்புகளாய் ...!!





காதல் ஒன்றும்
காயமல்ல ..
கால போக்கில்
ஆறிப்போக ..

நெஞ்சமெல்லாம்
வாழுதே
தழும்புகளாய் ...!!