Friday, May 28, 2010

சாகா முத்தங்கள் ..



உன் முத்தத்துக்கும்
முத்தத்தின் சத்தத்துக்கும்
நடுவே நான்
செத்துவிட வேண்டும்
என்றேன்..
சத்தம் வராத முத்தங்களில்
சாகா வரமளிக்கிறாள்
அன்று முதல்...!!

-மதன்

Wednesday, May 26, 2010

காதலியின் பெயரை முன்வைத்து ..




ஓர் அழகிய வண்ணத்தாளில்
கவிதையாக
கிறுக்கியிருக்கலாம்

ஒரு சில்வண்டின்
ரீங்காரம் போல
பாடிக்காட்டியிருக்கலாம்

தீர்ந்துபோன குவளைத்தண்ணிரின்
கடைசி சொட்டில் விரல் நனைத்து
தரையில் எழுதியிருக்கலாம்

மெல்லிய ராகமாய்
அவளின் காதருகில்
முணுமுணுத்திருக்கலாம்

காதலியின்
பெயரை வைத்துக்கொண்டு
இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம்

எங்கெங்கோ சுற்றித்திரியும்
இந்த
ரயில்வண்டியின் கழிவறையில்
காதலியின் பெயரெழுதிச்
சென்றவனை
என்ன செய்யலாம் ?

- ஜெனோவா

Sunday, May 23, 2010

இதில் என்ன பாவம்?


மனிதர்கள் சிலநேரம்
நிறம் மாறலாம்..

மனங்களும்
அவர் குணங்களும்
தடம் மாறலாம்...

இலக்கணம்
சில நேரம்
பிழையாகலாம்...

எழுதிய
அன்பு இலக்கியம்
தவறாகலாம்...


விரல்களைத் தாண்டி
வளர்ந்ததைக் கண்டு..

நகங்களை நாமும்
நறுக்குவதுண்டு..

இதில் என்ன பாவம்?
எதற்கிந்த சோகம்?

Friday, May 21, 2010

எந்த நிழலில்...




எத்தனை நாள் ,
எத்தனை நாள்
இப்படி நான்
வாழ்ந்திருப்பேன் ..?

நீயுமில்லை
என்று சொன்னால்
எந்த நிழலில்
ஓய்வெடுப்பேன் ?..

Tuesday, May 11, 2010

ஏழ ..





எட்டுக்காணி போனா..
அட எவனும் ஏழ இல்ல ...
மானம் மட்டும் போனா - நீ
மய்க்கா நாளே ஏழ ..

Tuesday, May 4, 2010

எம் பொழப்பு ..!




ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சி போவது போல் ,
நீ கிழிச்ச கோட்டு வழி ,
நீளுதடி எம் பொழப்பு ...!!

- ராவணன்