Sunday, January 31, 2010

நண்பன்..




டவுனுக்குப் போகலாமென்றிருந்தது
பொரித்த புரோட்டாக்களைச்
சொல்லிவிட்டு காத்துக்கொண்டிருந்தேன்
கலைந்த கேசமும் வெறித்த கண்களுமென
ஆடைகளற்றுத் தேமேவென
சாயா கேட்டுக்கொண்டிருந்தான்
பால்ய காலத்து நண்பன் கனகசுப்ரமணி
பயங் கலந்தபடி அவ்வப்போது
என்னைப் பார்த்துக்கொண்டே
முகம் முழுக்கச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்
சில ரூபாய் தாள்களைத் திணித்துவிட்டு
ஏதும் செய்ய இயலாதபடிக்கு நகர்ந்துவிட்டேன்
பெருங்குரலெடுத்து ஓலமிட்டான் நண்பன்
உலகத் துன்பத்தின் ஒட்டுமொத்தக் குரலாக
அது இருந்தது!

- பாக்கியம் சங்கர்.
Flickr Link

1 comment: