Friday, January 15, 2010

தேவதைகள்..




ஏன் இப்படி என்றேன்
ஏன் கூடாது என்றாள்
இந் நிலவொளியில் என் மடிகிடந்து
கதைப்பாயா என்று கேட்டேன்
அடக்க மாட்டாமல் சிரித்தவள்
நீ கவிஞனா எனக் கேட்டாள்
இந்தத் தொழிலுக்கு ஏன் வந்தாய் என்றேன்
பிடிச்சிருக்கு என்றாள்
மேலும் கேட்கத் தோணாமல்
அவள் மடி புதைந்தேன்
என்னை ஆற்றுப்படுத்தியவள்
சிரித்தபடியே இருந்தாள்
தேவதைகள் அவ்வப்போது
காட்சியளித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்!

- பாக்கியம் சங்கர்.

No comments: