Tuesday, January 19, 2010

தமிலை முடிச்சுட்டேன்!'




'ழ' 'ல'வாக
வழுக்கிப்போனது.
'ற' 'ர'ணமாகி
நாராசமானது.
சுழிகளே இல்லாத
'ண'க்கள் பல்லில் தெறித்து
உதடு வழி உதிர்ந்தன.
'அனிச்ச'த்தை மெள்ள மெள்ள
'மொப்பக் குலைத்து'
தேர்வுக்குப் படித்த மகள்
கடைவாயில் தமிழ் ரத்தம்
ஒழுகக் கத்தினாள்
'அம்மா!
தமிலை முடிச்சுட்டேன்!'
அப்படித்தான்பட்டது
எனக்கும்!


-
ப.உமாமகேஸ்வரி

1 comment:

King Vishy said...

Ha ha.. semma punch in the end..