Friday, April 20, 2012

ஒரு மழை



~என்.விநாயக முருகன்




ஒரு மழை
சில கணங்கள்
கால இயந்திரத்தில்
பின்னோக்கி இழுத்து செல்கிறது

ஒரு மழை
புறக்கணிக்கப்பட்ட
சில பிரியங்களை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பிரிந்து சென்றவர்களை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பழைய காயங்களை கீறி
வலியை நினைவூட்டுகிறது

ஒரு மழை
காதலியை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பள்ளி தோழிகளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
கல்லூரி ஆசிரியைகளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
நண்பனை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
நண்பனின் காதலியை,
நண்பனின் தங்கையை
நண்பனின் மனைவியை
நண்பனின் அம்மாவை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
சாலையில் கடந்து சென்ற
முகம் தெரியாத பெண்ணை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
குழந்தையை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
கடவுளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
சைத்தானை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
காதலை நினைவூட்டுகிறது

ஒரு மழை
காமத்தை நினைவூட்டுகிறது

ஒரு மழை
கவிதை எழுத நினைவூட்டுகிறது

ஒரு மழை
கொலை செய்ய நினைவூட்டுகிறது

ஒரு மழை
பொய் சொல்ல நினைவூட்டுகிறது

ஒரு மழை
தற்கொலையை நினைவூட்டுகிறது


ஒரு மழை
மது விடுதியை புகை பிடித்தலை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
தேநீர் இடைவெளியை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
சில நேரங்களில்
இன்னொரு மழையை
நினைவூட்டுகிறது
http://nvmonline.blogspot.in/2011/11/blog-post_26.html 
Picture courtesy 

No comments: