
நித்யானந்தாவை
நித்தமும் பழிக்கும்
என் மனைவிக்கு
இன்று வரை தெரியாது
முத்துக்குமார் என்றொருவன்
மரித்துபோனது...
என்றாவது ஒரு நாள்
என் நாட்குறிப்பிலுள்ள
அவன் புகைபடத்தை காட்டி கேட்பாள்
அப்போது சொல்லிக்கொள்ளலாம்
நம்மையெல்லாம் ஏமாற்றினானே
ஒரு நித்யானந்தா
அவனை போல்
நம் எல்லோராலும் ஏமாற்றபட்டவன்தான்
இந்த முத்துக்குமாரென்று...
- முத்து ரூபா