Monday, November 16, 2009

குழந்தை வரைந்த மழை !




குழந்தையிடம்
மழையை வரையுமாறு
கேட்டுக்கொண்டேன்
அது ஒருவீட்டை வரைந்தது.

மழை எங்கே என்றேன்?
நாம்வீட்டுக்குள் இருக்கிறோம்
மழைவெளியே பெய்கிறது
என்றது குழந்தை!

- தஞ்சாவூர்க் கவிராயர்

No comments: