Wednesday, July 29, 2009

முல்லை சொன்னதாம் ..



முல்லைக்கு
தேர் கொடுத்த
பாரியை பார்த்து
முல்லை சொன்னதாம் ..

முதலில் நீ
மரம் வெட்டி
தேர் கட்டுவதை
நிறுத்தும் என்று !!

Thursday, July 23, 2009

வேர்விட்ட கொடியாய் ...




பாறையில்
செய்தது
என் மனமென்று

தோழிக்கு
சொல்லி இருந்தேன் ..

பாறையின்
இடுக்கில்

வேர்விட்ட
கொடியாய்

நீ நெஞ்சில்
முளைத்து
விட்டாய் !!!

Friday, July 10, 2009

ஒரு நதி...




ஒரு நதி
ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் !!!

Wednesday, July 1, 2009

காடாகும் கனவு !!



சிறு தொட்டியின்
ஒருங்கிய
சுவர்களிலிருந்து
மறுகி மறுகிக்
கேட்கிறது

அந்தச் செடியின்
காடாகும் கனவு!!