படித்ததில் பிடித்தது , கேட்டதில் ரசித்தது .
Wednesday, May 20, 2009
நாம் வாழும் வீடு !!
நாம் வாழும் வீடு ,
ஆளில்லா தீவு,
யாருக்கும்
அனுமதி கிடையாது ...
வழிமாறி யாரும்
வந்தாலும் வரலாம்
வீட்டுக்கு
முகவரி கூடாது ...!!!
Sunday, May 17, 2009
தேடிச் சோறுநிதந் தின்று ...
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
ஆனந்தம் !!!
ஆயிரம் கோடிகள்
செல்வம்,
அது யாருக்கு
இங்கே வேண்டும் ??
அரை நொடி
என்றால் கூட
அந்த ஆனந்தம்
ஒன்றே போதும்...
Friday, May 15, 2009
பொன்மடி !!
மூங்கிலுக்குள்
நுழைகின்ற காற்று
முக்தி பெற்று
திரும்புதல் போல,
உன் மடியில்
சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்,
உன் பொன்மடி வாழ்க !!!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)