உனது வளையாடும்
அழகான கை
தீண்டவே..
தலையில்
இலையொன்று
விழ வேண்டுமே !!
கூரியர் தருகிற முத்துக்குமார்
அலுத்துக்கொள்ளவில்லை மழையை.
'நாலு நாட்களாய்
நல்ல மழை சார்'
சொல்லும்போதே
ஈரமாய்ச் சிரித்தார்.
கையெழுத்திட்டு வாங்கிய
இந்தச் சிரிப்பைவிடக் கூடுதலாக
என்ன இருந்துவிடப்போகிறது
கடித உறைக்குள்!
- கல்யாண்ஜி
Photo From