
கையைச் சுடும்
என்றாலும்,
தீயைத் தொடும்
பிள்ளை போல்,
உன்னையே
மீண்டும்
நினைக்கிறேன்...

வாழ்வு சேறு
காதல் தாமரை
யாக்கை திரி
காதல் சுடர்
ஜீவன் நதி
காதல் கடல்
பிறவி பிழை
காதல் திருத்தம்
இருதயம் கல்
காதல் சிற்பம்
ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் வைதம்
காதல் அத்வைதம்
சருமம் சூனியம்
காதல் பிண்டம்
மானுடம் மாயம்
காதல் அமரம்!!
கொஞ்சம் தேநீர் , நிறைய வானம்
-வைரமுத்து

சேலை
கசங்கிடாமல்
நானும்
கட்டிப்பிடிப்பேன் ....!!
ஊரும் மறந்து,
பேரும் மறந்து,
பூமி விட்டு
வா போகலாம் !!!

தாலாட்டும்
அன்னைக்கெல்லாம்
தங்கள் பிள்ளை
மார்பை முட்டி
பாலுண்ணும்
சத்தம்
சங்கீதம் !!!!